tamilnadu

img

100 நாட்களில் ஏலம் எடுக்க கார்ப்பரேட்டுகளுக்கு மோடி அரசு அழைப்பு

சென்னை, ஜூன் 19 - மத்தியில் இரண்டாவது முறையாக மிருக பலத்துடன் ஆட்சிக்கு வந்துள்ள மோடி அரசு மீதமுள்ள பொதுத்துறை  நிறுவனங்களையும் விட்டுவைக்கப் போவதில்லை. இதன் தொடக்கமாக, நாட்டிலேயே, ஏன் உலகிலேயே மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய ரயில்வேயை தற்போது தனியார் வேட்டையாட திறந்து விட உள்ளனர். இந்திய ரயில்வே மீது ரிலையன்ஸ், டாடா  உள்பட பல  பெரும் நிறுவனங்களுக்கு பல நாட் களாக ஒரு கண்  உண்டு. காரணம் பரந்துவிரிந்து கிடக்கும் இந்திய நாட்டில் நாள்தோறும்  கோடிக்கணக் கான மக்கள் ரயில்களை பயன்படுத்து கின்றனர். இதனால் ஆம்னிபேருந்து போல் ரயில் வழித்தடங்களை கைப் பற்றினால் ரயில்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் உணவகம், ரயில் நிலைய தங்குமிடம், சரக்குப் போக்குவரத்து என பலவழிகளில் கொள்ளை லாபம் ஈட்டலாம் என கணக்கு போட்டு வைத்துள்ளன.  ரயில்வே தொழிற்சங்கங்களும் இடதுசாரிக்கட்சிகளும் தனியார் மயத்தை கடுமையாக எதிர்த்து வருவ தால் இந்த  விஷயத்தில் கடந்தகால ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு துணிய வில்லை. ஆனால் கடந்த ஐந்தாண்டு களில் மத்தியில் ஆட்சி செய்த மோடி அரசு இந்த விஷயத்தில் எக்ஸ்பிரஸ் வேகத்தில் சென்றது. முதல்கட்டமாக நாடு முழுவதும் உள்ள ரயில்வே அச்ச கங்களை இழுத்து மூடியது. அதன் பணிகளை தனியாரிடம் ஒப் படைத்துவிட்டது. இந்த அச்சகங்களில் தான் இதுவரை ரயில்டிக்கெட்டுகள், ரயில்வே கால அட்டவணைகள், ரயில்வேக்கு தேவையான எழுது பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்தன.

தற்போது இதன் இரண்டாவது கட்டமாக சென்னை இராயபுரத்தில் உள்ள அச்சகம் உள்பட 6 அச்சகங் களை மூட ரயில்வே திட்டமிட்டுள்ளது. சில ரயில் வழித்தடங்களில் ரயில்களை  ஓட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து  ஒப்பந்தப்புள்ளி கோரியிருக்கிறது. இது மோடி அரசின் அடுத்த 100 நாள் திட்டம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆரம்பத்தில்  நெரிசல் இல்லா வழித்தடத்திலும் சுற்றுலாத்தலங்கள் உள்ள வழித்தடத்திலும் அனுமதி அளிக்கப்படும். படிப்படியாக தங்க நாற்கர பாதை எனப்படும் சென்னை  மும்பை, மும்பை-தில்லி, தில்லி -ஹவுரா, ஹவுரா- சென்னை வழித்தடத் திற்கு இது விரிவாக்கப்படும்.  இந்த தங்க நாற்கர வழித்தடத்தின் மொத்த தூரம் தற்போது இருக்கும் தண்டவாளத்தில் 20 விழுக்காடுதான். ஆனால் 55 விழுக்காடு வண்டிகள் இந்த பாதையில் ஓடுகின்றன என்றால் அந்த அளவுக்கு எப்போதும் பரபரப்பாக ரயில்கள் ஓடிக்கொண்டிருக்கும் பாதைகளாகும். இந்திய ரயில்வேக்கு டிக்கெட்டுகள் மூலமாக கணிசமான வருமானம் வரும் வழித்தடமும் இது தான். இந்த பாதையில் தனியாரை அனுமதித்தாலும் அவர்கள் புதிய ரயில்களை இயக்கமுடியாது. தற் போது ஓடும் ரயில்களில்  ஒரு பகுதியை தான் அவர்கள் இயக்கப் போகிறார்கள். 

ரயில்வேயை தனியார்மயமாக்க 2017ல்  மோடி அரசு ரயில்வே வளர்ச்சி  ஆணையம் அமைக்க முடிவு செய்தது. ரயில்வே துறையில் தனியார் நிறுவனங்கள் நுழையவும் அவர் களுக்கு அனைத்து சேவைகளிலும்  சமவாய்ப்பு  அளிக்கவும் அமைச்ச ரவைக் கூட்டத்திலேயே முடிவும் எடுக்கப்பட்டது. இதன் அர்த்தம் என்னவென்றால் ஓடுகிற வண்டிகளில் பிரதான வழித்தடங்களில் பாதியளவு தனியாருக்கு திறந்துவிடப்படும் என்பதுதான். இதற்கான பொருத்தமான தனியார் நிறுவனங்களை அடையாளம் காணும் பணியை மண்டல ரயில்வே பொது மேலாளர்களிடம் ரயில்வே வாரியம் ஒப்படைத்துள்ளது. இதற்கான கடிதத்தை ரயில்வே வாரிய  தலைவர் வி.கே. யாதவ், வாரியத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ரயில்வே உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளார். இந்த முடிவை மேற்கொள்ளும் முன்பு ரயில்வே தொழிற்சங்கங்களை ரயில்வே அமைச்சர் அழைத்துப் பேசுவார் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.